தாலி கட்டும் நேரத்தில் “எஸ்கேப்” – எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு போலீஸ் வலைவீச்சு
செங்கம்: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மின்சாரவாரிய எஞ்சினியர் மணமகன் மாயமானார். இதனால் திருமணம் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், துக்காபேட்டையை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பிரபாகரன். பி.இ.படித்துள்ள இவர், புதுப்பாளையத்தில் மின்வாரிய உதவி செயற் பொறியாளராக வேலைபார்க்கிறார்.
இவருக்கும் வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த முதுநிலை பட்டதாரி பெண் ஒருவருக்கும் பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக திருமண பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். பெரியோர்கள் நிச்சயித்தபடி திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.
செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திரண்டிருந்தனர். மணமக்கள் அழைப்பும் நடந்தது.
இதில் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் மணமகன் பிரபாகரன் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் திருமணமண்டபத்திற்கு திரும்பவில்லை.
தாலிகட்டும் நேரம் நெருங்கியதால் மணமகன் மற்றும் மணமகளின் வீட்டார் இடையே பரபரப்பு ஏற்பட்டது. மாப்பிள்ளையை பல இடங்களில் தேடினர். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
முகூர்த்த நேரம் முடிந்தும் மணமகன் வராததால் திருமணம் நின்றது. இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண் வீட்டார் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து திருமணம் பிடிக்காமல் மணமகன் மாயமானாரா அல்லது வேறுபெண்ணுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications