கடைசி நேரத்தில் மணமகன் எஸ்கேப்.. பரிதவித்த மணமகளுக்கு இன்னொருவர் தாலி கட்டினார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கடைசி நேரத்தில் மணமகன் ஓடிப் போய் விட்டதால், மணமகள் பரிதவிப்புக்குள்ளானார். இருப்பினும் இன்னொரு மாப்பிள்ளையை உடனடியாகத் தேடிப் பிடித்து அவரை வைத்து கல்யாணத்தை முடித்து அத்தனை பேரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆறு்முகநேரி லட்சுமி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் பொன் ராதா. இவருக்கும் காயல்பட்டிணத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் சித்திரைவேலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் பால்பாண்டி திடீரென இறந்து போனார். ஆனாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போக கூடாது என கருதிய மணமகள் வீ்ட்டினர் நிச்சயிக்கப்பட்ட தேதிதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. அதன்படி திருமண மண்டபத்திற்கு மணமகள் பொன்ராதா குடு்ம்பத்தினர் வ்ந்திருந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் மாப்பிள்ளை குடும்பத்தினர் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தனர் மணமகள் குடும்பத்தினர். மணமகன் வீட்டிற்கு சென்று பெண் குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது புதுமாப்பிள்ளை மாயமானது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியில் திகைத்த மணமகள் குடும்பத்தினர் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்க்க துவங்கினர். மணமகளின் உறவினரான கமலா நேரு காலனியை சேர்ந்த சித்திரைலிங்கம் என்பவரது மகன் சிவகுமார் புதிய மணமகன் ஆனார். இதையடுத்து முகூர்த்த நேரத்தில் பொன்ராதாவிற்கும், சிவகுமாருக்கும் திருமணம் நடந்தது. திருமண நேரத்தில் மணமகன் மாயமான இந்த சம்பவத்தால் ஆறுமுகநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+