வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் விறுவிறு வாக்குப் பதிவு..!
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மிகக் கடுமையான வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தைப் பறித்த நான்கு முக்கியமான மாவட்டங்களில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தை கடந்த ஆண்டு இறுதியில் புரட்டிப் போட்டது கடும் மழையும், எதிர்பாராத வெள்ளமும். குறிப்பாக கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

கடலூர் மாவட்டத்தில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். சென்னை பெரு வெள்ளத்தில் மூழ்கிப் போனது. பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதே நிலைதான் பிற 3 மாவட்டங்களிலும்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இந்த நான்கு மாவட்டங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருவள்ளூரில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடலூரில் 27 சதவீதமும், சென்னையில் 25 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 21 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
தொடர்ந்து இந்த நான்கு மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications