5 ஆண்டு ஆகியும் முடியாத செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி - டென்ஷனில் பயணிகள்
நெல்லை: செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி 5 ஆண்டுகள் ஆகியும் முடிவடையவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி கொண்டிருந்த மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2010 செப்டம்பர் மாதம் நிறுத்தப்பட்டது. ரூ.355 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுடன் முடிக்கப்பட்டு 2017 ஜனவரி முதல் ரயில் போக்குவரத்து நடைபெறும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

மொத்தம் 59 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல பாதை செல்லும் வழியில் சிறிய பாலங்கள், 3 பெரிய பாலங்கள், 5 குகைகள் அமைக்கும் பணிகளும் அடக்கம். இரும்பு பாதை அமைத்தல், மலை குகைகளை அகலப்படுத்துதல், சமதளத்தை விரிவுப்படுத்துதல் என்ற வகையில் 3 பிரிவாக பிரித்து வேலை நடந்து வருகிறது. ஆனால் 5 ஆண்டுகளாகியும் இந்த மூன்று பிரிவு பணிகளில் எந்த பிரிவும் முழுமை அடையவில்லை.
தற்போது தொடர்ச்சியாக பெய்த பருவமழையால் அகல பாதையில் பணியில் ஈடுபட்ட ஓப்பந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வி்ட்டனர். இதனால் பணிகள் தொய்வடைந்த நிலையில் உள்ளன. மழை முடிந்து ஒரு வாரம் முடிந்த நிலையிலும் இதுவரை யாரும் பணிக்கு வரவில்லை.
செங்கோட்டை முதல் புனலூர் வரை 2 வருடங்களுக்கு முன்பு ஸ்லிப்பர்கட்டைகள் போடப்பட்டன. தற்போது அவற்றின் மீது புல்புதர்களும், செடிகளும், கொடிகளும் படர்ந்து காணப்படுகிறது. இந்த வழித்தடம் போதிய வருமானம் இல்லாத வழித்தடம் என்பதால் போதிய நிதி ஓதுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் கேரள செல்லும் சுற்றுலா பயணிகளும், வேலை நிமித்தமாக இங்கு வருவோரும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications