கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி சித்ரவதை ... மகாராஷ்டிராவிலிருந்து மீண்டு வந்த மாரிமுத்து
மதுரை: வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் இருந்து பல சிறுவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள ஸ்வீட் கடைகளுக்கு கொத்தடிமைகளாக செல்லும் அவல நிலை உள்ளது. உட்கார கூட முடியாமல் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கும் தமிழக சிறுவர்களை கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொடுமைப்படுத்தும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து,15 என்ற சிறுவன் தன் அம்மாவின் கடனை தீர்க்க மகாராஷ்டிரா மாநிலத்தில் புந்தர்பூர் எனும் இடத்தில் ஸ்வீட் கடையில் வேலை பார்த்த போது அந்த கடை முதலாளியால் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கிருந்து தப்பி தமிழகம் திரும்பியுள்ளார்.
மாரிமுத்துவின் தாய் பட்ட ரூ.20,000 கடனை தீர்க்க ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தனது மகனை மகாராஷ்டிரா அனுப்பி வைத்துள்ளார். ரூ.40,000 கொடுப்பதாக ஒப்பந்தத்தில் பேசப்பட்டதையடுத்து பாதி பாதியாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 15 மணிநேரம் வேலைப்பார்க்கும் மாரிமுத்துவுக்கு உட்கார கூட அனுமதி அளிக்கப்பதுவதில்லை. தலை வலி என சிறிது இடைவெளி கேட்ட மாரிமுத்துவை ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடி, கொதிக்கும் எண்ணெயை காலில் ஊற்றி அந்த கடை முதலாளி கொடுமை செய்துள்ளார்.
உடலில் பல இடங்களில் கொப்புளங்களுடன், கால்களில் காயங்களுடனும், தப்பி வந்த மாரிமுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் மாரிமுத்து.
'காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வேலைப்பார்ப்பேன். மிகவும் குறுகிய இடத்தில் நின்று இனிப்பு பலகாரங்கள் தயார் செய்வேன். சிறிது நேர உணவு இடைவெளிக்குப் பின் மீண்டும் பணியை தொடர்வேன்' என்று மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நடந்த அன்று, தலை வலி அதிகமாக இருந்ததால் சிறிது உட்கார அனுமதி கேட்டேன். அனுமதி தர மறுத்த முதலாளி ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டிவிட்டு கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெயை என் மீது ஊற்றிவிட்டார்.
என்னுடன் வேலைப்பார்க்கும் ஒருவரது உதவியால் நான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றேன். வலி தாங்க முடியாமல் அங்கிருந்த மாவை பூசி எரிச்சலை கட்டுப்படுத்தினேன் என்று மாரிமுத்து கூறியுள்ளார். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று எண்ணி வெறும் ரூ.200யுடன், ரயிலில் பயணச்சீட்டு பெறாமல் தமிழகம் வந்து சேர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை அரசு சாரா அமைப்பினரின் உதவியுடன் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications