சென்னையில் பாலத்தில் பஸ் மோதி 15 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த மாநகராட்சி பேருந்து மேம்பாலத்தில் மோதியதால் 15 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னை ஐயப்பன்தாங்கலில் இருந்து வள்ளலார் நகருக்கு 37ஜி பஸ் இன்று மதியம் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பாலத்தில் சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரவேகமாக மோதியது.
இதனால் பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகள் காயமடைந்தனர். பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்ததன. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பயணிகளை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications