அவினாசி அருகே லாரி மீது மோதிய அரசுப் பேருந்து - 15 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கோவை: திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது அரசு விரைவு பேருந்து ஒன்று. அப்பேருந்து திருப்பூர்- அவினாசி புறவழிச்சாலையில் பழக்கரை எனுமிடத்தில் முன்னாள் சென்ற லாரியை முந்த முற்பட்டது.

Bus-lorry accident in Avinasi

அப்போது அந்த லாரி மீது பேருந்து வேகமாக மோதியதில் 15 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் அவசரமே விபத்திற்கு காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பயணிகளில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை, சிறு சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+