திருச்சியில் தீவிரமானது பஸ் ஸ்டிரைக்... பொதுமக்கள் தவிப்பு!
போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தும் பஸ் ஸ்டிரைக் இன்று தொடங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கில் குதித்துள்ளனர்.
நாளைதான் ஸ்ட்ரைக் தொடங்கும் என்று அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில் திடீரென இன்று மதியமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகரில் பல இடங்களில், பேருந்துகளை போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்ப் பேருந்துகளை முழுமையாக நிறுத்தியுள்ளனர். அதே போல அரியலூர், பெரம்பலூரிலும் பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பஸ் நிலையங்களில அசாதரண சூழ்நிலை நிலவி வருகிறது. பஸ் டிபோக்கள், பஸ் நிலையங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications