6வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்.. கூடுதலாக இயக்கப்படும் ரயில்கள்!
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
சென்னை: தமிழகம் முழுக்கபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது.
ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த போராட்டம் குறித்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது. தமிழகம் முழுக்க 70% பேருந்துகள் இயங்கவில்லை.
இந்த நிலையில் பொதுமக்களின் தேவையை குறைப்பதற்காக சென்னையில் இன்று கூடுதலாக 30 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications