கோயம்பேட்டிலிருந்து பஸ்கள் போகின்றன!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பஸ் ஸ்டிரைக் வேகம் பிடித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தமிழகம் முழுவதும் இன்று பிற்பகல் முதலே பஸ் ஸ்டிரைக் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இருப்பினும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. அங்கிருந்து வெளியூர்களுக்குப் பஸ்கள் போய்க் கொண்டுள்ளன. அதேசமயம், வெளியூர்களிலிருந்து பேருந்துகள் வரவில்லை. இதனால் சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் இதுவரை பாதிப்பை சந்திக்கவில்லை.
முழு நிலவரம் மாலை 6 மணிக்கு மேல்தான் தெரிய வரும் என்று தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications