தமிழகம் - கர்நாடகா இடையேயான பேருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம்- கர்நாடகா இடையேயான பேருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகாவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம்- கர்நாடகா இடையேயான பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 6 நாட்களாக இரு மாநில பேருந்து போக்குவரத்து நேற்று காலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஆனால் கர்நாடகாவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications