முதல்வரின் நிவராண நிதிக்கு ரூ.6 கோடி அளித்த தொழில் அதிபர்கள்
சென்னை: முதல்வரின் நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ.6 கோடி வழங்கினர்.
வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பலரும் நிதி அளித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் தொழில் அதிபர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் வைத்து சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.22 கோடி அளித்தார்கள்.
மேலும் நேற்றும் சில தொழில் அதிபர்கள் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.6 கோடி அளித்தனர். எம்.ஆர்.எப். லிமிடெட்டின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான மேமன் ரூ.3 கோடியும், ராம்கோ குழும துணை தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ரூ.2 கோடியும், சபாநாயகர் கோயில் பொது தீஷிதர்கள் சார்பில் அதன் செயலாளர் சர்வேஸ்வர தீஷிதர் ரூ.1 கோடியும் அளித்தனர்.
முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பொதுமக்களும் நிதி அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications