நீட்: ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றுள்ளது.. மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லை- ரயில்வே துறை
நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றதால் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று மோசமான விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் சிபிஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அதில் நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றதால் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று மோசமான விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் ''புனேவிற்கு சென்ற ரயில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது. அதை அவசரமாக கொண்டு வர முடியாது. தற்போது சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய போதுமான ரயில்கள் கைவசம் இல்லை. 5,000 பேருக்கு திடீர் என்று ரயில் ஒதுக்க முடியாது'' என்றுள்ளது.
முக்கியமாக சிறப்பு ரயில் ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அரசு கேட்டுக்கொண்டால் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றுள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications