தீப்பொறி செல்வராஜ் இங்கேயே தீக்குளிப்பேன்டா.. என் தலைவன் கருப்பு.. உடைக்கிறார்டா பருப்பு..'அங்க'தான்
சென்னை: மதுவிலக்கை வலியுறுத்தி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் இன்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் 'கலகலப்பாக'த்தான் நடந்தது.
உண்ணாவிரதத்துக்கு வந்த விஜயகாந்த் காரைவிட்டு இறங்கி மேடை ஏறும் வரை மைக் பிடித்த ஒருவர், குறைந்தபட்சம் 20 முதல் 25 அடைமொழிகளால் அடுத்தடுத்து வாழ்க கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்...
விஜயகாந்த் மேடையில் அமர்ந்த போது அந்த கட்சியைச் சேர்ந்த தீப்பொறி செல்வராஜ் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். தலைமுறையை பறக்கவிட்டபடி பேசியது:
வாழுகிற தெய்வம்..வள்ளல்.. என் தலைவன் முகத்தைப் பாருங்கள்... நான் கேட்கிறேன்...
அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்தவர்களைப் பார்த்து கேட்கிறேன்...
எவனாவது வள்ளல் ஜெயலலிதான்னு எழுதியிருந்தா காட்டுடங்கடா... இந்த தீப்பொறி செல்வராஜ் இங்கேயே தீக்குளிக்கறன்டா...இந்த உண்ணா நோன்பிலே தீக்குளிக்க தயாராக இருக்கிறேன்..காட்ட முடியுமா? காட்ட முடியுமா?
அன்புக்கு கட்டுப்பட்டு என் தலைவன் கையை கட்டவும் தெரியும்.. அராஜகம் பண்றவனைப் பார்த்தா கையை வெட்டவும் தெரியும்டா.. கையை வெட்டவும் தெரியும்..இதான் என் தலைவன்..
சட்டசபையில் என் தலைவனைப் போல 'தில்' படைத்த 'ஆண்மை' படைத்த தலைவனைப் பார்த்ததுண்டா...
என் தலைவன் நாக்கை துறுத்துனா.... போதும் ஜெயலலிதா.. போதும் ஜெயலலிதா...
சுறுசுறுப்பு என் தலைவனுடைய முழு பொறுப்பு
என் தலைவனின் கண்களைப் பார்.. நெருப்பு
உடம்பு கருப்பு...
இதைச் சொன்னா சிலருக்கு வருது வெறுப்பு
உடைக்கிறார்டா என் தலைவர் பருப்பு...
இப்படி இவர் பேசி முடிக்கும் வரை விஜயகாந்த் மனைவி மற்றும் சக கட்சியினரிடம் வேறு ஏதோ விஷயத்தை ஹாயாக பேசியபடிதான் இருந்தார்..