கோவையில் வீட்டிற்குள் கார் புகுந்து விபத்து: 1 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு
கோவை: கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: துடியலூரில் ஏற்பட்ட கார் விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த பிரியா ஆறுச்சாமி தம்பதியினர் உட்பட 9 பேர் பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள உறவினர்களை சந்தித்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கோவை ஆத்துபாலம் அருகே வந்தபோது கார் கட்டுபாட்டை இழந்து மரத்தின் மீது மோதி அருகே இருந்த வீட்டின் சுவர் மீது இடித்து நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லட்சுமி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் பயணம் செய்த கன்ஷிகா என்ற 1 வயது குழந்தை பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தது. இந்த விபத்தில் சிக்கிய 7 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த லட்சுமி என்ற மற்றொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.