பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் கவிழ்ந்த சுற்றுலா கார்... கேரளாவை சேர்ந்த 4 பேரின் நிலை என்ன?
பொள்ளாச்சி அருகே கேரள மாநிலத்தினர் காரில் சுற்றுலா சென்றபோது அங்குள்ள வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேரின் நிலை தெரியவில்லை.
பொள்ளாச்சி: கேரள மாநிலத்தில் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்ற போது அங்குள்ள 11 அடி ஆழ வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் மீட்கப்பட்டார். எனினும் 4 பேரின் நிலை தெரியவில்லை.
கேரள மாநிலம், எர்ணாகுளம் அங்கமானியைச் சேர்ந்தவர் ஆல்பா (19). பட்டதாரி. இவரது நண்பர்கள் ஜூதின் ஜோய் (24), ஜாக்சன்(21),அமல் (20), லிஜோ (27).

இவர்களில் ஜூதின் ஜோய் துபாயில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். மேற்கண்ட 4 பேருடன் சேர்ந்து ஜூதின் ஜோயும் கடந்த 7-ஆம் தேதி மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்தனர்.
பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். காலை 7.15 மணியளவில் அவர்களது கார் பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேடு பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பாலத்தின் தடுப்புச் சுவரை இடித்து கொண்டு கார் வாய்க்காலில் பாய்ந்தது. வாய்க்காலில் சுமார் 11 அடிக்கு தண்ணீர் உள்ளதால் கார் மூழ்கியது.
கார் வாய்க்காலில் பாய்ந்த போது அதன் பின்பக்க கதவு திறந்து கொண்டது. இதனால் அதிலிருந்து வெளியே வந்த ஆல்பா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வாய்க்காலில் குளித்து கொண்டிருந்த மன்னார்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஆல்பாவை காப்பாற்றினார்.
எனினும் ஜூதின் ஜோய், ஜாக்சன், அமல் , லிஜோ ஆகிய 4 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தகவலறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் காரை தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications