Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தில் கார்கள் மூழ்காமல் இருக்க வேளச்சேரி காரங்க என்ன செய்றாங்க தெரியுமா?

2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியது போல இந்த ஆண்டும் நடக்காமல் இருக்க கார்களை பாலத்தின் மீது நிறுத்தியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ

    சென்னை: மழை வெள்ளத்தில் கார்கள் மூழ்கிவிடாமல் இருக்க வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடியவர்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது. கார்கள், இருசக்க வாகனங்கள் நீரில் மூழ்கி பயனற்று போனது.

    இந்த அடியிலிருந்து வாகன உரிமையாளர்கள் மட்டுமல்ல, சர்வீஸ சென்டர்களும் கூட பெரும் பாடு பட்டன. மீண்டு வர முடியாமல மூடப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் ஏராளம்.

    முதல் சில நாட்களிலேயே வெள்ளம்

    முதல் சில நாட்களிலேயே வெள்ளம்

    இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாள் முதலே பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. கனமழையால் வேளச்சேரிக்கு செல்லக்கூடிய ஓடை நிரம்பி வருகிறது. இன்னும் கனமழை இங்கு பெய்யத் தொடங்கினால் இந்த ஓடை நிரம்பி வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி குடியிருப்பாளர்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தியிருக்கிறார்கள்.

    பாலத்தில் கார் பார்க்கிங்

    பாலத்தில் கார் பார்க்கிங்

    விலை உயர்ந்த கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவும், நீரில் மூழ்கினால் மீண்டும் மறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாது என்ற காரணத்திற்காகவும் இந்த கார்களை மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நேற்று மாலையில் இருந்து தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

    கார்களுக்கும் ரெயின் கோட்

    கார்களுக்கும் ரெயின் கோட்

    மனிதர்களுக்கு ரெயின் கோட் இருப்பது போல கார்களுக்கும் ரெயின் கோட் இருக்கிறது. பல லட்சம் செலவு செய்து கார் வாங்கியவர்கள், கார்களை பாதுகாக்க சில ஆயிரங்கள் செலவு செய்து இந்த கோட் வாங்கலாம் என்பதே வாகன விற்பனையாளர்களின் பரிந்துரை.

    கார்களைக் காக்கும் ஃபிளட் கார்ட்

    கார்களைக் காக்கும் ஃபிளட் கார்ட்

    ‘ஃபிளட் கார்டு' என்று குறிப்படும் இந்த சாதனம் மழைக்காலங்களில் கார்கள் பாதிப்பை சந்திக்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வாக அமைகிறது. சிறிய டூஃபல் பேக் போல இருக்கும் இந்த பாதுகாப்பு கவரை, பெருமழைக்காலங்களில் காரின் மீது போர்த்தி விட்டால்போதும். பிறகு கீழே தொங்கும் கயிறுகளை இழுத்து காரின் மேற்புறத்தில் கட்டவேண்டும். மழைக்காலங்களில் மழை நீர் அதிகரித்து உங்களது காரை மூழ்கடிக்கும் கதிக்கு வந்தால், இந்த ஃபிளட் கார்டு காரை மூழ்காமல் பாதுகாக்கும்.

    (ஃபிளட் கார்டு பற்றி மேற்கொண்டு படிக்க)

    https://tamil.drivespark.com/four-wheelers/2017/huge-flood-guard-bag-your-car-needs-when-heavy-rain-pours-013336.html

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+