வெள்ளத்தில் கார்கள் மூழ்காமல் இருக்க வேளச்சேரி காரங்க என்ன செய்றாங்க தெரியுமா?
2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியது போல இந்த ஆண்டும் நடக்காமல் இருக்க கார்களை பாலத்தின் மீது நிறுத்தியுள்ளனர்.
Recommended Video

சென்னை: மழை வெள்ளத்தில் கார்கள் மூழ்கிவிடாமல் இருக்க வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடியவர்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது. கார்கள், இருசக்க வாகனங்கள் நீரில் மூழ்கி பயனற்று போனது.
இந்த அடியிலிருந்து வாகன உரிமையாளர்கள் மட்டுமல்ல, சர்வீஸ சென்டர்களும் கூட பெரும் பாடு பட்டன. மீண்டு வர முடியாமல மூடப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் ஏராளம்.

முதல் சில நாட்களிலேயே வெள்ளம்
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாள் முதலே பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. கனமழையால் வேளச்சேரிக்கு செல்லக்கூடிய ஓடை நிரம்பி வருகிறது. இன்னும் கனமழை இங்கு பெய்யத் தொடங்கினால் இந்த ஓடை நிரம்பி வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி குடியிருப்பாளர்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தியிருக்கிறார்கள்.

பாலத்தில் கார் பார்க்கிங்
விலை உயர்ந்த கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவும், நீரில் மூழ்கினால் மீண்டும் மறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாது என்ற காரணத்திற்காகவும் இந்த கார்களை மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நேற்று மாலையில் இருந்து தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

கார்களுக்கும் ரெயின் கோட்
மனிதர்களுக்கு ரெயின் கோட் இருப்பது போல கார்களுக்கும் ரெயின் கோட் இருக்கிறது. பல லட்சம் செலவு செய்து கார் வாங்கியவர்கள், கார்களை பாதுகாக்க சில ஆயிரங்கள் செலவு செய்து இந்த கோட் வாங்கலாம் என்பதே வாகன விற்பனையாளர்களின் பரிந்துரை.

கார்களைக் காக்கும் ஃபிளட் கார்ட்
‘ஃபிளட் கார்டு' என்று குறிப்படும் இந்த சாதனம் மழைக்காலங்களில் கார்கள் பாதிப்பை சந்திக்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வாக அமைகிறது. சிறிய டூஃபல் பேக் போல இருக்கும் இந்த பாதுகாப்பு கவரை, பெருமழைக்காலங்களில் காரின் மீது போர்த்தி விட்டால்போதும். பிறகு கீழே தொங்கும் கயிறுகளை இழுத்து காரின் மேற்புறத்தில் கட்டவேண்டும். மழைக்காலங்களில் மழை நீர் அதிகரித்து உங்களது காரை மூழ்கடிக்கும் கதிக்கு வந்தால், இந்த ஃபிளட் கார்டு காரை மூழ்காமல் பாதுகாக்கும்.
(ஃபிளட் கார்டு பற்றி மேற்கொண்டு படிக்க)
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications