விஜய் தவெக மாநாட்டில் பங்கேற்க போகும் பிரபலங்கள்? திடலில் இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா?
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கும் தவெக கட்சி மாநாடு பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் கட்சி மாநாட்டிற்காக செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதற்கிடையே, மாநாடு நடைபெறும் பகுதியில் வரிசையாக கேரவன்கள் நிறுத்தப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மொத்தம் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் பஸ்கள் மற்றும் வேன்களில் வர உள்ளனர். இவர்களின் வாகனங்களை நிறுத்த அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாடு முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு தேவையான மின்சாரம் அனைத்தும் முழுக்க முழுக்க ஜெனரேட்டர்கள் வாயிலாக பெறப்படுகிறது.
மாநாட்டில் விஜய் 6 மணியளவில் உரையாற்றுவார் என்று சொல்லப்படுகிறது. 600 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து சென்றவாறு மாநாட்டுத்திடலில் கூடியிருக்கும் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். மாநாட்டு வளாகத்திற்குள் செல்வதற்கு 5 வழிகளும், வெளியே வருவதற்கு 15 வழிப்பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தற்காலிகமாக செல்போன் டவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநாட்டு நிகழ்வை வெகுதொலைவில் இருந்து காணும் வகையில் மாநாட்டு திடலின் பிரதான இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் உள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் பாதுகாப்பு கருதி சுமார் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்கிடையே மாநாடு நடைபெறும் இடத்தில் வரிசையாக கேரவன்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், நாளைய மாநாட்டில் முக்கிய பிரபலங்கள் யாரும் கலந்து கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமூகத்தில் செல்வாக்கு உள்ள சிலரையும் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் விவாதித்து வருகிறார்கள். இந்த கேள்விக்கு எல்லாம் நாளை விடை தெரிந்துவிடும் என்பதே தவெக நிர்வாகிகள் சொல்லும் கருத்தாக உள்ளது.

-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications