கபாலி : உலகம் ஒருவனுக்கா... பாடலை தடை செய்யுங்க - மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் இடம்பெற்றுள்ள 'உலகம் ஒருவனுக்கா'... பாடலுக்கு தடை விதிக்கக் கோரி நேதாஜி சுபாஷ் சேனா அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படம் இடம் பெற்றுள்ள உலகம் ஒருவனுக்கா... என்ற பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

Case against Kabali song Ulagam Oruvanukka

பாடலில் இடம்பெறும் தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலின் வரிகள் சில சர்ச்சைக்குரியதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வா வா நீ வா தொழ

உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி திறந்திடுமே

ஆகிய வரிகள்தான் சர்ச்சைக்குறிய வரிகளாக கூறப்படுகிறது. பாடலில் வரும் வரிகள் தேவையற்ற சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்‌ கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மனு தாக்கல் செய்த வி.மகாராஜன் என்பவர் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+