கலைப்புலி தாணு மீது சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் டேவிட் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் படம் கபாலி. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு நியூ திரையரங்க உரிமையாளர் டேவிட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 2 லட்சத்தை திரும்ப வழங்கவில்லை என்றும், இதற்காக தாணு மீது நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக தாணு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications