ஏற்காடு இடைத்தேர்தலில் மோதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்பி மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

Senthil Balaji
ஏற்காடு: ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்பி செல்வகணபதி உள்ளிட்ட 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோதல் தொடர்பாக 4 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலையொட்டு அதிமுக மற்றும் திமுக தரப்பில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களும், கட்சி முக்கிய நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அனுப்பூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சிலர் வாக்குகள் சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே திடீர் மோதல் உருவானது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இம் மோதலில் அதிமுகவைச் சேர்ந்த அருப்புக்கோட்டை ராம்பாண்டியன். எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முருகேசன், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் குருசாமி., ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் அழகாபுரியான், புதுப்பட்டி விருதுநகர் மாவட்ட பிரதிநிதி அழகுநம்பி. ராஜபாளையம் கிளை ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன், தேவராயன்பட்டி கிளை செயலாளர் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இம் மோதலில் திமுகவினர் சிலரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மோதல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்பி செல்வகணபதி மற்றும் இரு கட்சிகளைச் சேர்ந்த 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திமுகவைச் சேர்ந்த கனகராஜ், நாகராஜ், ஆறுமுகம் மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுகவினர் யாரும் கைது செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+