சசிகலா புஷ்பாவை தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட நாராயண பெருமாள் மீதும் பாய்கிறது வழக்குகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா புஷ்பாவுக்கு பின்புலமாக இருக்கும் தொழிலதிபர் வைகுண்டராஜனுடன் நெருக்கமாக இருந்ததால் அதிமுக அமைப்பு செயலராக இருந்த நாராயண பெருமாளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அனேகமாக அவர் மீதும் சசிகலா புஷ்பாவைப் போல வழக்குகள் பாயக் கூடும் என தெரிகிறது.

ஜெயலலிதாவை எதிர்த்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் ராஜ்யசபா எம்.பி.யான சசிகலா புஷ்பா. அவர் மீது பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cases against Sasikala Pushpa supporter Narayana Perumal?

இதில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றப் படிகளேறியிருக்கிறார். இதனிடையே சசிகலா புஷ்பாவை வளர்த்துவிட்ட அமைச்சர் சண்முகநாதனின் கட்சிப் பதவியை ஜெயலலிதா அதிரடியாகப் பறித்திருந்தார்.

இதற்குப் பின்னரும் சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரான அதிமுக அமைப்புச் செயலர் நாராயண பெருமாள், தொழிலதிபர் வைகுண்டராஜன் வகையறாக்களுடன் மிக நெருக்கமான உறவை தொடர்ந்திருக்கிறார். நாராயணபெருமாளின் மகனின் திருமண வரவேற்பில் வைகுண்டராஜன் வகையறாக்கள் பங்கேற்க தடபுடலாக விருந்தளிக்கப்பட்டது.

இந்த விருந்து வைத்த மறுநாளே இன்று நாராயண பெருமாளின் அமைப்புச் செயலர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. அனேகமாக சசிகலா புஷ்பாவை மிரட்டுவது போல நாராயணபெருமாள் மீது ஏகப்பட்ட வழக்குகள் போடப்படுவதற்கு சாத்தியமிருக்கின்றன என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

நாராயணா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+