காவிரி எங்களுக்கும் சொந்தம்...உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா கட்டுப்பட வேண்டும்: சி.ஆர். சரஸ்வதி
சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா அரசு கட்டுப்பட வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நடிகை சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை 12,000 கன அடிநீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கர்நாடகாவில் நேற்று உச்சகட்ட வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள், லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனிடையே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி அளித்த பேட்டியில், காவிரி எங்களுடையதும் கூட... காவிரியில் எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் இருக்கிறது.
உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.. அந்த உத்தரவுக்கு கர்நாடாகா கண்டிப்பாக கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications