காவிரி ஆற்றில் சாய ஆலை கழிவு நீர்.. உடனடி நடவடிக்கை தேவை.. ஈஸ்வரன் கோரிக்கை
ஈரோடு : சாய மற்றும் தோல் கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்து அனைத்துதரப்பு மக்களையும் முட்டாளாக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் நொச்சுக்காட்டு வலசு, சுண்ணாம்பு ஓடை, அக்ரஹாரம் (பிச்சக்காரன் பள்ளம்), மற்றும் பெரும்பள்ளம் போன்ற ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட இன்னும் பல பகுதிகளில் கால்வாய் வழியாக சாய மற்றும் தோல் கழிவுகள் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் தொடர்ந்து சாய மற்றும் தோல் கழிவுகள் அதிக அளவில் கலக்கப்பட்டு வருவதால் ஆற்று நீர் மாசுபட்டு எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மட்டுமல்லாமல், ஓடும் இடமெல்லாம் நிலத்தடிநீரும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறி இருக்கிறது.
இதனால் அதிகளவில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு கூடிய விரைவில் டெல்டா மாவட்டம் வரை எதிரொலிக்கும். உண்மைநிலை இவ்வாறு இருக்கையில் சாய கழிவுகளே காவிரி ஆற்றில் கலக்கப்படுவதில்லை என்று கூறி சாமானிய மக்களின் உயிரோடு விளையாடுவது யாரை காப்பாற்றுவதற்காக என்று ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
இன்னும் சில சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் நூதன முறையில் கழிவுகளை எந்தவொரு சுத்திகரிப்பு செய்யாமல் கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் அப்படியே விடுவதால் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீர் மிகவும் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீர் என எதற்குமே பயன்படுத்த முடியவில்லை.
நீர் இருந்தும் அருந்த முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். தமிழக அரசுக்கும், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கும் காவிரி ஆற்றில் சாய மற்றும் தோல் கழிவுகள் கலக்கப்படுவது தெரியவில்லை என்றால் நானும், அப்பகுதி விவசாயிகளும் நேரடியாக கூட்டி சென்று காட்டுகிறோம். எங்களுடன் அதிகாரிகள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு வரத் தயாரா என்று ஈஸ்வரன் அந்த அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications