காவிரி: தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து ஏப்.2ல் போராட்டம் - ஜி.கே வாசன்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய பாஜக அரசு அவமதிப்புவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் வாசன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாதது, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வாரியம் அமைக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்திருப்பதாகவும், ஜி.கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், கட்சியின் டெல்டா பகுதி தமாகா மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு, தமது தலைமையில் திருச்சியில் நடைபெறுவதாகவும், ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது என்பது மத்திய அரசின் கடமையாகும் என்றும் தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரல் 2ஆம் தேதியன்று மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications