For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி பிரச்சனையை தூண்டிவிட்டு தீர்க்காமல் இருப்பதே அரசியல் கட்சிகள்: ஆர்ஜே பாலாஜி அதிரடி!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வாக்கு வங்கிக்காக காவிரி பிரச்சனையை வேண்டும் என்றே தீர்க்காமல் வைத்துள்ளது அரசியல் கட்சிகள் தான் என நடிகரும், ஆர்ஜேவுமான பாலாஜி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூரில் தமிழர்களின் உடைமைகளை கன்னட அமைப்பினர் தேடித் தேடி சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், ஆர்ஜேவுமான பாலாஜி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

புரிந்து கொள்க

புரிந்து கொள்க

வாக்கு வங்கி உள்ளிட்ட காரணங்களுக்காக காவிரி பிரச்சனையை தூண்டிவிட்டு வேண்டும் என்றே தீர்க்காமல் வைத்திருப்பது அரிசயல் கட்சிகள் என்பதை இரு மாநில மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் சில வன்முறை கும்பல்கள் தான் தமிழர்களை தாக்கி வருகின்றன. அது வெட்கப்பட வேண்டியது. அதற்காக மொத்த மாநிலம் மற்றும் அதன் மக்களுக்கு எதிராக நாம் டேக் போட வேண்டாம்.

விவசாயிகள்

விவசாயிகள்

கர்நாடகாவுக்கு எதிராக ஹேஷ்டேக் போடுவதால் இங்குள்ள நம் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. மேலும் இதனால் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களின் நிலைமை தான் மோசமாகும்.

வேண்டாம்

வேண்டாம்

வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவிக்காமல் இருப்போம். காவிரி விவகாரம் நிர்வாக அளவில் தீர்க்கப்பட வேண்டும். வன்முறையால் அல்ல.

English summary
RJ Balaji said in Facebook that People of both states,lets plz understand that the whole Kaveri issue is triggered and purposely not resolved for decades by political parties/anti-national outfits for their own vote banks n other vested interests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X