காவிரி: தஞ்சை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
தஞ்சை ரயில் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டன.

இன்னும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன. மே 10-ஆம் தேதி முதல் காவல்துறை அனுமதி கொடுத்தாலும் இல்லாவிட்டாலும் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த போவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தஞ்சையில் ரயில் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications