காவிரியை காக்க மூன்று கட்ட முற்றுகை போராட்டம்: வைகோ
தஞ்சாவூர்: காவிரியில் இரு அணைகள் கட்டப்படவுள்ளதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், 3 கட்ட முற்றுகைப் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தஞ்சாவூரில் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 215 அமைப்புகள் கலந்து கொண்டன.
இதில், காவிரியில் இரு அணைகளைக் கட்ட முனைந்துவிட்ட கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை தடுத்து நிறுத்துவது குறித்தும், தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தொடங்க விடாமல் தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
காவிரியில் இரு இடங்களில் அணைகள் கட்ட கர்நாடக அரசு முனைந்துவிட்டதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை மத்திய அரசு செய்ய வேண்டும். மீத்தேன் எரிவாயு திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி, காவிரி பிரச்னைக்காக 1924 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்ட பிப். 18ஆம் தேதியைக் கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை மாநகரம் தவிர்த்து காவிரி நதி நீரால் பயன்பெறும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதைத் தடுத்து, அறவழியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
பின்னர், சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை மார்ச் 11-ஆம் தேதி இயங்கவிடாமல் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23-ஆம் தேதி சென்னை உள்பட 14 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முற்றுகையிடவும் தீர்மானிக்கப்பட்டது என்று வைகோ கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications