For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி: நாளையே தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ

    டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

    காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

    Cauvery: TN government should arrange an all party meet tomorrow itself says, Stalin

    இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்படி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறினார். ஏற்கனவே நாளை நடக்கும் என்று கூறப்பட்டு இருந்த ஸ்டாலின் தலைமயிலான அனைத்துக் கட்சி கூட்டம், 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அதே சமயத்தில் ஸ்டாலின் தமிழக அரசுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும். இந்த அனைத்துக் கட்சி கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதனை சட்டரீதியாக செயல்படுத்துவதை வலியுறுத்தும் வகையிலும் அமைய வேண்டும், என்றுள்ளார்.

    English summary
    TN government should arrange an all party meet tomorrow itself says, Stalin to discuss on Cauvery issue. Central govt has submitted a scheme to set up Cauvery Management board said Ministry of Water Resources Secretary UB Singh in Supreme court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X