Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக எல்லை வந்தது காவிரி நீர்.. வழக்கத்தைவிட தாமதம்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இன்று காலை வந்தடைந்தது.

Subscribe to Oneindia Tamil

தருமபுரி : கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்று காலை தமிழக எல்லையான பென்னாகரத்தில் உள்ள பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் காவிரியிலும், அதன் துணை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய வற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்டியா மாவட்டத்தில் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து கணிச மாக உயர்ந்துள்ளது. இதேபோல கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

 Cauvery water enters TN border today morning

124.8 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை யின் நீர்மட்டம் 73.95 அடி வரை உயர்ந்தது. இதேபோல கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கால்வாய்கள் மூலம் காவிரியில் கலந்து, பிலிகுண்டுலு வழியாக சுமார் 1,500 கன அடி நீர் என்ற அளவில் தமிழகத்தை அடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜுன் 30ம் தேதி திறந்துவிடப்பட்ட காவிரி நீரானது இன்று காலை தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. வழக்கமாக 3 அல்லது 5 நாட்களில் காவிரி நீர் தமிழக எல்லை வந்து விடும் நிலையில் 8 நாட்கள் கழித்தே இந்த முறை தமிழக எல்லையை காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் காவிரி நீர் மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிகளை சென்றடையுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+