கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கனஅடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சி: டெல்டா மாவட்ட விவசாய பாசனத்திற்காக கல்லணையில் இருந்து திறக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது மேட்டூர் அணை, 117 அடியை எட்டி இருக்கிறது. இன்று முழு கொள்ளவை அணை அடைந்துவிடும் என்பதால், மொத்தமாக மதகுகள் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது இந்த தண்ணீர் வரத்து காரணமாக கல்லனையும் நிறைந்து இருக்கிறது. இதனால் கல்லணையும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கல்லணையில் இருந்து விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாய தேவைகளுக்காக இந்த தண்ணீர் பயன்படுத்தப்படும்.
தமிழக அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications