முத்துக்குமாரசாமி வழக்கில் திருப்பம்... அதிமுகவினர் உள்பட 6 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை!
நெல்லை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அ.தி.மு.க. பிரமுகர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் வேளாண் துறையில் 119 ஓட்டுநர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டன. அப்போது, நெல்லையில் 7 பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட மேலிட அழுத்தம் காரணமாக வேளாண் செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

7 தற்காலிக டிரைவர்கள் நியமனம் செய்தது தொடர்பாக அதிமுகவினர் கொடுத்த நெருக்கடியே முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குக் காரணம் என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வேளாண்மைதுறையில் காலியாக உள்ள டிரைவர்கள் நியமனத்தில் பணம் வசூலித்து தர வலியுறுத்தி மிரட்டியதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைதுறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பிரமுகர்களிடம் விசாரணை
நெல்லையை சேர்ந்த சில அ.தி.மு.க. பிரமுகர்கள், டிரைவர் வேலைக்கு சிபாரிசு செய்தவர்களை முத்துகுமாரசாமி நியமனம் செய்யாததால் அவர் மிரட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
6 பேருக்கு சம்மன்
இதனால் முத்துகுமாரசாமியின் செல்போனில் பதிவான எண்கள் மற்றும் முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சரின் உதவியாளர் செல்போனில் பதிவான எண்கள் மூலம் நெல்லை அ.தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பியும் ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.
பெண் அதிகாரியிடம் விசாரணை
நெல்லை வேளாண்மை துறையில் முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒரு பெண் அதிகாரி பணிபுரிந்து வருகிறார். அவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விசாரணை
அதேபோல், நெல்லையைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேளாண் துறை ஓட்டுநர்கள் நியமனம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதால் மாநிலம் முழுவதும் அதிமுகவினரிடையே ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications