முத்துக்குமாரசாமி வழக்கில் திருப்பம்... அதிமுகவினர் உள்பட 6 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை!
நெல்லை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அ.தி.மு.க. பிரமுகர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் வேளாண் துறையில் 119 ஓட்டுநர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டன. அப்போது, நெல்லையில் 7 பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட மேலிட அழுத்தம் காரணமாக வேளாண் செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

7 தற்காலிக டிரைவர்கள் நியமனம் செய்தது தொடர்பாக அதிமுகவினர் கொடுத்த நெருக்கடியே முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குக் காரணம் என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வேளாண்மைதுறையில் காலியாக உள்ள டிரைவர்கள் நியமனத்தில் பணம் வசூலித்து தர வலியுறுத்தி மிரட்டியதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைதுறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பிரமுகர்களிடம் விசாரணை
நெல்லையை சேர்ந்த சில அ.தி.மு.க. பிரமுகர்கள், டிரைவர் வேலைக்கு சிபாரிசு செய்தவர்களை முத்துகுமாரசாமி நியமனம் செய்யாததால் அவர் மிரட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
6 பேருக்கு சம்மன்
இதனால் முத்துகுமாரசாமியின் செல்போனில் பதிவான எண்கள் மற்றும் முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சரின் உதவியாளர் செல்போனில் பதிவான எண்கள் மூலம் நெல்லை அ.தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பியும் ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.
பெண் அதிகாரியிடம் விசாரணை
நெல்லை வேளாண்மை துறையில் முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒரு பெண் அதிகாரி பணிபுரிந்து வருகிறார். அவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விசாரணை
அதேபோல், நெல்லையைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேளாண் துறை ஓட்டுநர்கள் நியமனம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதால் மாநிலம் முழுவதும் அதிமுகவினரிடையே ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications