Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கைது- சிபிஐ நடவடிக்கை

போயஸ்கார்டன் வீட்டுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டன் வீட்டிற்கு நெருக்கமான இவர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததராகவும், கட்டுமான தொழிலும் செய்து வந்தார். உயர்மட்ட தொடர்பு காரணமாக தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளையும் சேகர் ரெட்டி தனது நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார்.

இந்தத் தொழிலில் அவர் அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் துணையோடு பல முறைகேடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
இவர், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுப்பதாகவும், ஏராளமான ரொக்கப் பணத்தை பதுக்கிவைத்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 8ஆம் தேதி முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வருமான வரித்துறையினரால், மொத்தம் 131 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 171 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின.

இந்நிலையில், சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சிபிஐ பிரிவினர், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழும், சேகர் ரெட்டிக்கும் அரசு அதிகாரிகளுக்குமிடையே உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

சிடி ஆதாரம்

சிடி ஆதாரம்

வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மிக முக்கியமான சிடி ஆதாரம் ஒன்றும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அதில் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் அதிகார மையம் மற்றும் 5 மிக மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானதே பிடிபட்ட பணமும் தங்கமும் என்ற விவரம் அடங்கியுள்ளதாம். சிக்கிய சிடியில் உள்ள விவரங்கள் அப்படியே டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டதாம்.

விசாரணை வளையத்தில் சேகர் ரெட்டி

விசாரணை வளையத்தில் சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி ரூ. 92 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். அதேவேளையில் அமலாக்கத்துறையினர், சேகர் ரெட்டி முறைகேடாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்கின்றனர்.

சேகர் ரெட்டி கைதாகிறார்

சேகர் ரெட்டி கைதாகிறார்

சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சிபிஐ பிரிவினர், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழும், சேகர் ரெட்டிக்கும் அரசு அதிகாரிகள் அமைச்சர்களுக்குமிடையே உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

புதிய ரூபாய் நோட்டுக்கள்

புதிய ரூபாய் நோட்டுக்கள்

அதேபோல் மத்திய அமலாக்கப் பிரிவினர், பணமாற்ற தடைச் சட்டத்தின் கீழும், சேகர் ரெட்டிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சேகர் ரெட்டியிடம் சிக்கிய புதிய 92 கோடி ரூபாய் பண மாற்றம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பர்களும் கைதாவார்கள்

நண்பர்களும் கைதாவார்கள்

அதேபோல், சேகர் ரெட்டியிடம் சிக்கிய 171 கிலோ தங்கக்கட்டிகள் வெளிநாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டதா என்று அமலாக்கப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர். சேகர் ரெட்டி முக்கிய தகவலை வெளியே சொல்லும் பட்சத்தில் சேகர் ரெட்டி மட்டுமல்லாது அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+