2ஜி வழக்கு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆஜராக சி.பி.ஐ. திடீர் உத்தரவு!!
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சர்ச்சைக்குரிய டெலிபோன் உரையாடல்கள் குறித்து விசாரிப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை விசாரணைக்கு சி.பி.ஐ. அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் தி.மு.க.வினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீதான வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென ஆ. ராசா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புதிய வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் புதிய திருப்பமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெலிபோன் உரையாடல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டிருந்தார். அதில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக இருந்த சரத்குமார், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோருடன் முந்தைய திமுக ஆட்சியில் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாஃபர் சேட் பேசுவது இடம்பெற்றிருப்பதாகவும் பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார்.
மேலும் கனிமொழியுடன் 2010-ஆம் ஆண்டு நவம்பர் 23; 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 16; சரத்குமாருடன் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 13; கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுடன் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஜாஃபர் சேட் பேசியதாகவும் இவை அனைத்துமே ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கான ஆதாரமே என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த டெலிபோன் உரையாடல்களை ஒட்டுமொத்தமாக பொய் என்று அப்போதே தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்திருந்தார்.
அதே நேரத்தில் சி.பி.ஐயும் விசாரணை நீதிமன்றத்தில் இந்த டெலிபோன் உரையாடல்களை குறிப்பிட்டு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான் சர்ச்சைக்குரிய இந்த டெலிபோன் உரையாடல் குறித்து விசாரிப்பதற்காக சண்முகநாதனை சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் ஆஜராக வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது தி.மு.க.வை பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications