குற்றாலத்திற்கு வரும் குடிகாரர்களே.. கேமராக்கள் கண்காணிக்கின்றன உஷார்!
குற்றாலம்: குற்றாலத்தில் குற்றங்களை தடுக்க 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்காகவே அங்கு வரும் குடிகாரர்கள் ஆடி போய் உள்ளனர்.
குற்றால சீசனை ஓட்டி அ்ஙகு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை டிஐஜி முருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க காவல்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. போதிய போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மெயின் அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளள போலீசாருக்கு புளோரசனட் ரெயின்கோட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீரில் குளித்து கொண்டிருப்பவர்கள் கூட போலீசாரை பார்க்க முடியும்.
மேலும் குற்றாலத்தில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் மது அருந்துபவர்கள், பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்கள், திருட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் குற்றவாளிகள் நடமாட்டம கண்காணிக்கப்படும்.

மது அருந்தி விட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கும், மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தொடரும் சாரல்
இதற்கிடையே, குற்றாலம், தென்காசி, செங்கோ்ட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து சாரலும, வெயிலும், காற்றும் மாறி மாறி அடித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இனறு அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை காலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications