குற்றாலத்திற்கு வரும் குடிகாரர்களே.. கேமராக்கள் கண்காணிக்கின்றன உஷார்!
குற்றாலம்: குற்றாலத்தில் குற்றங்களை தடுக்க 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்காகவே அங்கு வரும் குடிகாரர்கள் ஆடி போய் உள்ளனர்.
குற்றால சீசனை ஓட்டி அ்ஙகு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை டிஐஜி முருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க காவல்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. போதிய போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மெயின் அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளள போலீசாருக்கு புளோரசனட் ரெயின்கோட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீரில் குளித்து கொண்டிருப்பவர்கள் கூட போலீசாரை பார்க்க முடியும்.
மேலும் குற்றாலத்தில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் மது அருந்துபவர்கள், பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்கள், திருட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் குற்றவாளிகள் நடமாட்டம கண்காணிக்கப்படும்.

மது அருந்தி விட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கும், மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தொடரும் சாரல்
இதற்கிடையே, குற்றாலம், தென்காசி, செங்கோ்ட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து சாரலும, வெயிலும், காற்றும் மாறி மாறி அடித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இனறு அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை காலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications