மதுரையில் இந்தியன் வங்கி கொள்ளை விவகாரம்: சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு
இந்தியன் வங்கியின் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
Recommended Video

மதுரை: இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பட்டப்பகலில் காசாளரின் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வங்கி ஊழியரின் பணி ஓய்வுக்கான பாராட்டு விழா அன்றைய தினம் வங்கியின் மாடியில் நடைபெற்றதால், ஊழியர்கள் அதில் பங்கேற்க சென்றிருந்தனர். வங்கி காசாளரும் பணத்தை பெட்டியில் வைத்து பூட்டாமல், அப்படியே வைத்துவிட்டு வாழ்த்து செல்ல விழாவுக்கு சென்றுவிட்ட நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இதுகுறித்து வங்கியின் சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். வாடிக்கையாளர் போல் தொப்பி அணிந்து உட்கார்ந்திருக்கும் அந்த நபர், அனைவரும் விழாவுக்கு சென்றுவிட்ட நிலையில் பணத்தை கொள்ளையடிக்க சுற்றுமுற்றும் பார்க்கிறார். அங்கு யாரோ வருவதுபோல் இருக்கவும் மீண்டும் இயல்பாக இருப்பதைபோல் வந்து உட்கார்ந்துகொள்கிறார்.
மீண்டும் காசாளரின் இருக்கை பக்கம் உள்ளே இறங்கி, பணக்கட்டுகளை எடுத்து தன் பையில் திணிக்கிறார். மறுபடியும் ஏறி வந்து இரண்டு பணக்கட்டுகளை எடுத்து பையில் திணித்து வெளியேறுகிறார். இந்த காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார் அவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் ஒரு வங்கியில் அதுவும் சிசிடிவி கேமரா பொருத்தியிருப்பது தெரிந்தும் காசாளரின் இருக்கையிலேயே அத்துமீறி நுழைந்து பணம் திருடப்படும் காட்சி பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications