நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மோடியிடம் ஓ.பி.எஸ். கோரிக்கை
சென்னை: நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :-
‘‘எனது தலைவி ஜெயலலிதா ஆசியுடன் தமிழக அரசு சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு வரவேற்கிறது.
புதிதாக தொடங்கப்படும் அந்த அமைப்பில் மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நேரடி பண பரிமாற்றம் திட்டம் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மானிய தொகை அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.
அதன்படி கல்வி உதவி தொகை, பேறு கால உதவிகள், சமூக பாதுகாப்பு பென்சன் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. பொது வினியோக திட்டத்துக்கான மானியங்களை நுகர்வோரின் வங்கி கணக்கில் சேர்க்க கூடாது என தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஏற்கனவே முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை சமாளிக்க முடியாமல் பல நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் அவை தீர்க்கப்பட்டன. மேலும் பொறுப்பற்ற தன்மை அற்ற நிலை ஏற்படும்.
மேலும் மண்எண்ணை மற்றும் உரங்களுக்கான மானியத்தையும் ரத்து செய்யக் கூடாது. வங்கிகளில் பணம் செலுத்தும் நேரடி மானிய திட்டத்தை மாநில அரசுகள் மூலமே செயல்படுத்த வேண்டும்.
ஏற்கனவே, மாநில அரசின் பயனாளிகளுக்கு நலம் அளிக்கும் பல திட்டங்களை வங்கிகள் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். அது போன்று நேரடி மானிய திட்டத்தையும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications