மாரத்தானில் வென்ற - சிறந்த மாணவ, மாணவியருக்கு விருது, பாராட்டு
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு எல்ஐசி சார்பில் விருது வழங்கி பாராட்டப்பட்டது. அதேபோல மாரத்தான் போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி எல்.ஐ.சி. வைர விழா கொண்டாடுவதை குறித்து சிறப்புரையாற்றினார்.

கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடர்பாக ராஜி என்ற மாணவியும், எல்.ஐ .சி .யின் செய்லபாடுகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி மாணவிகள் தனலெட்சுமியும், பரமேஸ்வரியும், காப்பீட்டின் பயன்கள் தொடர்பாக உமா மஹேஸ்வரியும் பேசினார்கள்.
முத்தய்யன், ஆகாஷ், தேவதர்ஷினி, ஈஸ்வரன், அஜய் பிரகாஷ், சஞ்சீவ், ஜெனிபர், கார்த்திகா, பார்கவி லலிதா, பரத்குமார் ஆகிய 10 மாணவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் எல்.ஐ .சி.யின் சார்பாக வழங்கப்பட்டன. ஏராளமான பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

மாரத்தான்
இதற்கிடையே, காரைக்குடியில் நாச்சியப்ப சுவாமிகளின் 5வது குருபூஜை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

அதிகாலை 4.40 மணிக்கெல்லாம் பெற்றோர் வர இயலாத சூழ்நிலையில் ஆசிரியர் கருப்பையா 10 மாணவ, மாணவியரை தேவகோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்து மூலம் அழைத்து கொண்டு காரைக்குடியில் பை பாஸ் ரோட்டில் ஆரம்பித்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க வைத்தார். மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று கடைசி வரை குறிப்பிட்ட இடமான கோவிலூர் மடத்தை அடைந்தனர்.
இவர்களுக்கு பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தார்கள். முதல் தலைமுறையாக இவர்கள் மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர் அழைத்து செல்ல இயலாத சூழ்நிலையில் (பெற்றோர் கூலி வேலை பார்ப்பதால்) பள்ளியின் ஆசிரியர்களே காலை வேளையில் பேருந்து மூலம் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications