கூட்டணி ஆட்சி வராது... திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - கருணாநிதி
சென்னை: தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தொங்கு சட்டசபை வராது என்றும் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கும் என்றும் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திராவிட கட்சிகளுக்கு தமிழகத்தில் மாற்று எதுவும் இல்லை என்றும் கூறிய கருணாநிதி, இளைஞர்களால் உருவாக்கப்பட்ட திமுக இன்றைக்கும் இளைஞர்களால் நிறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டியளித்த கருணாநிதி, 93 வயதிலும் தனது வழக்கமான பாணியில் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசம்
தேர்தல் பிரச்சாரங்கள் அந்தக் காலத்தைவிட அதிக வித்தியாசம் கண்டுள்ளது. முன்பெல்லாம் ஒலிப்பெருக்கி மூலம் மட்டுமே பிரச்சாரம் செய்வோம். இப்போதெல்லாம் பிரச்சாரம் விஞ்ஞான வளர்ச்சி கண்டுள்ளது.

சமுதாய பணி
திராவிட இயக்கம் சமுதாய இயக்கமாக செயல்படுகிறது. எங்கள் சமுதாயப் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அரசியல் மூலமாக சமுதாயப் பணி ஆற்றவே தயாராக இருக்கிறோம். எனவே திராவிட ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அலுப்பு ஏற்படாது.

திமுகவின் மது கொள்கை
திமுகவின் மதுகொள்கை குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, "சொன்ன சொல்லில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை திமுக நிரூபித்துக் காட்டியிருக்கிறது. 1971-ல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோதே இது தற்காலிகமானதே என்று கூறினேன்.

மது ஆலைகள் மூடப்படும்
அதேபோல் 1974ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. திமுகவினர் மதுஆலைகளை நடத்துவதாகக் கூறுவது கற்பனை குற்றச்சாட்டு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மது ஆலைகளும் மூடப்படும் என்றார். எதிர்கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டுவது போல திமுகவினர் மது ஆலைகள் நடத்தினால் அவைகளும் மூடப்படும்

தமிழகத்தில் மாற்றம் வரும்
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். திராவிட கட்சிகளுக்கு மாற்று எதுவும் கிடையாது. நாங்கள்தான் மாற்று என்று கூறும் மாற்று அணியை சவாலாக கருதவில்லை.

தனித்து ஆட்சி அமைப்போம்
கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.
மக்களின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார் .

ஊழல்வாதி ஜெயலலிதா
காங்கிரஸ் - திமுகவை ஊழல் கூட்டணி என ஜெயலலிதா விமர்சித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த கருணாநிதி ''ஒரு ஊழல்வாதி எப்படி ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியும்'' என கேள்வி எழுப்பினார்.

இலவசங்களில் வேறுபாடு
இலவசங்களை திமுக அளிப்பதற்கும், அதிமுக அளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திமுக இலவசங்களை இலவசங்களாக மட்டுமே அளிக்கிறது. அதிமுக தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக இலவசங்களை அளிக்கிறது என கருணாநிதி கூறினார்.

இளைஞர்கள் நிறைந்த கட்சி
இளைஞர்களிடையே திமுக மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது பரப்புரையல்ல... அது பசப்புரை என்று கூறினார்.
இளைஞர் அணியால் உருவானதுதான் திமுக. திமுகவில் இன்றைக்கும் இளைஞர்கள் நிறைந்துள்ளனர். இளைஞர்களிடையே இன்றைக்கும் திமுகவிற்கு வரவேற்பு உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications