For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை கிரானைட் முறைகேடு : 38 நிறுவனங்கள் மீது மேலும் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மேலூர் கிரானைட் முறைகேடு வழக்கில் மேலும் 2 குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மேலூர் : விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில் பிஆர்பி, எம்எஸ் கிரானைட் நிறுவனங்கள் மீது மேலும் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள.

மேலூர் கிரானைட் வழக்கில் ஏற்கனவே 74 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Chargesheet filed in illegal Granite mining case at Melur court

மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிக்கை 697 பக்கங்களை கொண்டுள்ளது. பிஆர்பி கிரானைட் நிறுவனம் மேலூர், கீழையூர் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட கூடுதலாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று வழக்கு தொடரப்பட்டது.

கண்மாய், நீர்பிடிப்பு பகுதிகளை சேதப்படுத்தி அரசுக்கு ரூ. 718.36 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக 38 கிரானைட் நிறுவனங்கள் மீது பொதுப்பணித்துறை புகார் அளித்தது. இந்த வழக்கின் விசாரணையை தனிப்படை போலீசார் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 75-வது குற்றப்பத்திரிக்கையை மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே 70 வழக்குகளில் சுமார் 34 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chargesheet filed against Madurai district's Melur illegal granite mining case, nearly 697 pages chargesheet filed against 38 granite companies there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X