Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 3 கோடியை சுட்டு விட்டார்.. நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது ஹைகோர்ட்டில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்து விட்டதாக வழக்குப் போடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ஆதி நாராண சுப்பிரமணியன். இவர்தான் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

Cheating case against actor JK Rithesh

நான் வெளிநாடு வாழ் இந்தியர். அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றியபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஜே.கே.ரித்தீஷ் 3 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதனை வங்கி மூலமாக அளித்தேன். ஆனால் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ஏமாற்றிவிட்டார்.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் கடந்த ஆண்டு புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. ரித்தீஷ் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ள நிலையில் தற்போது இந்தப் புதிய பண மோசடி புகார் வந்து சேர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+