For Daily Alerts
Just In
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு விளக்கம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் நார்த்தேக்கத்தின் உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு நீர் வரவு 3493 கன அடி. நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறப்படும் நீரின் அளவு 3500 கன அடியாகும். செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் தற்போது பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு செய்தி, மக்கள் தொடரப் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து, சென்னைக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக வீணர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருவதையடுத்து அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
English summary
Chembarampakkam lake is safety, TN gvt announced after rumors spread.
Story first published: Saturday, December 5, 2015, 16:50 [IST]