For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடிக்கொண்டிருந்தபோதே, இரண்டாக பிரிந்த மின்சார ரயில்.. சென்னை அருகே பரபரப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே இரண்டாக மின்சார ரயில் பெட்டிகள் பிரிந்துவிட்டதால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மின்சார ரயில் ஒன்றின் பெட்டிகள் இணைப்பு திடீரென பிரிந்துவிட்டன. இதனால், ரயில் இரண்டாக பிரிந்தது. உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

Chengalpattu to Beach train service affected

இதன்பிறகு, ரயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெற்றது. இதனால், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மதிய நேரத்தில் இந்த மார்கத்தில் பயணித்த மின்சார ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடிக்கொண்டிருந்தபோதே ரயில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Chengalpattu to Beach train service has been affected this afternoon due to the minor issue in a electric train.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X