இறந்த கணவரின் உடலுடன் 4 நாள் இருந்த துணைவியார்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இறந்தவர் உடலை 4 நாட்களாக வீட்டில் வைத்திருந்ததை அடுத்து செங்கல்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னெரி ஊராட்சிக்குட்பட்ட பெரிய புத்தூர் கிராமம் உள்ளது. இங்கு நீஞ்சிலி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தாமோதரன் (62). இவர் ஜாதகம் கணிப்பது பஞ்சாங்கம் பார்ப்பது போன்ற தொழில் செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இறந்துவிட்டதால் தனக்கு உதவியாக இருந்த திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரியுடன் கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் தாமோதரனை அக்கம்பக்கத்தினர் சரியாக காணவில்லை.

டிபன்
எனினும் ராஜேஸ்வரி அவ்வபோது அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம் காசு கொடுத்து இரண்டு பேருக்கு டிபன் வாங்கி வர சொல்லுவார். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அப்பகுதி மக்கள் தாமோதரன் எங்கே என்று விசாரித்தபோது அவர் ஊருக்கு போயிருக்கிறார் என ஏதாவது ஒரு பதில் சொல்லி அனுப்பி விடுவாராம்.

அக்கம்பக்கம்
இந்நிலையில் நள்ளிரவு அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தாமோதரன் வீட்டுக்குள் நுழைந்து பார்க்க முயன்றனர். அப்போது ராஜேஸ்வரி வந்தவர்களை தாக்கி உள்ளார். ராஜேஸ்வரியை தள்ளிவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஒருவரது உடல் கிடந்தது. வீடு முழுவதும் புழுக்கள் மேய்ந்து கொண்டிருந்தது.

தகவல்
உடனே கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தாமோதரன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை
ராஜேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்படுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ராஜேஸ்வரி அவர் வீட்டு பக்கம் யாரையும் அனுமதிக்க மாட்டார் எனது கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தாமோதரன் இயற்கையான முறையில் இறந்தாரா இல்லை கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications