உழைப்பாளர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல் – சென்னை கலெக்டர் உத்தரவு
சென்னை: உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி அன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு சென்னை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"வருகின்ற 1 ஆம் தேதி அன்று மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்களானது விதிகள் தமிழ்நாடு மற்றும் மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகளின்கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications