தவறுதலாக பெட்டி மாறி ஏறிய இளம்பெண்ணுக்கு பளார் – சென்னையில் டிடிஆர் அட்டகாசம்!
சென்னை: சென்னையில் பெண் ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் என்ற காரணத்திற்காக டிக்கெட் பரிசோதகர் அவரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் இளம் பெண் நிஜாய்ஸ் .
நேற்று முன்தினம், இவர் நுங்கம்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறினார்.

முதல் வகுப்பில் பயணம்:
2 ஆவது வகுப்பு டிக்கெட் அவர் கையில் இருந்தது.அவசரமாக ரயிலில் ஏறியதால் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டார். மாம்பலத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்தார். பயணிகளிடம் டிக்கெட்களை வாங்கி சோதனை செய்தார்.
டிக்கெட் பரிசோதகர் ஆவேசம்:
இளம் பெண் நிஜாய்ஸ் அவரிடம் இருந்த டிக்கெட்டை காட்டினார். அது 2 ஆவது வகுப்பு டிக்கெட் என்பதை அறிந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ஆவேசம் ஆனார். இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து ரயிலில் இருந்து கீழே இறங்கு என்றார்.
கன்னத்தில் பளார்:
‘‘அவசரத்தில் ஏறி விட்டேன் அபராதம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்'' என்று அந்த பெண் கூறினார். ஆனால் ரயில் நின்றதும் அந்த பெண்ணை ரயில் பெட்டியில் இருந்து கீழே இழுத்தார். கன்னத்திலும் அறைந்தார்.
மீண்டும் அறை:
டிக்கெட் பரிசோதகர் அறைக்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போதும் அறைந்தார். இதற்குள் அந்த பெண் தனது நண்பர்களை அழைத்தார்.
அவமானப் படுத்திய பரிசோதகர்:
‘‘கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருந்தும், மற்ற பயணிகள் முன்னிலையில் டிக்கெட் பரிசோதகர் தன்னை கிரிமினல் குற்றவாளி போல அடித்து அவமானப்படுத்தி விட்டார்'' என்று கூறினார்.
மன்னிப்பு கேட்ட அதிகாரி:
இது குறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் இளம் பெண் நிஜாய்ஸ் புகார் மனு கொடுத்தார். மூத்த ரயில்வே போலீஸ் அதிகாரி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். டிக்கெட் பரிசோதகர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து புகாரைத் திரும்ப பெற்றார் நிஜாய்ஸ்.
-
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications