தவறுதலாக பெட்டி மாறி ஏறிய இளம்பெண்ணுக்கு பளார் – சென்னையில் டிடிஆர் அட்டகாசம்!
சென்னை: சென்னையில் பெண் ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் என்ற காரணத்திற்காக டிக்கெட் பரிசோதகர் அவரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் இளம் பெண் நிஜாய்ஸ் .
நேற்று முன்தினம், இவர் நுங்கம்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறினார்.

முதல் வகுப்பில் பயணம்:
2 ஆவது வகுப்பு டிக்கெட் அவர் கையில் இருந்தது.அவசரமாக ரயிலில் ஏறியதால் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டார். மாம்பலத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்தார். பயணிகளிடம் டிக்கெட்களை வாங்கி சோதனை செய்தார்.
டிக்கெட் பரிசோதகர் ஆவேசம்:
இளம் பெண் நிஜாய்ஸ் அவரிடம் இருந்த டிக்கெட்டை காட்டினார். அது 2 ஆவது வகுப்பு டிக்கெட் என்பதை அறிந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ஆவேசம் ஆனார். இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து ரயிலில் இருந்து கீழே இறங்கு என்றார்.
கன்னத்தில் பளார்:
‘‘அவசரத்தில் ஏறி விட்டேன் அபராதம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்'' என்று அந்த பெண் கூறினார். ஆனால் ரயில் நின்றதும் அந்த பெண்ணை ரயில் பெட்டியில் இருந்து கீழே இழுத்தார். கன்னத்திலும் அறைந்தார்.
மீண்டும் அறை:
டிக்கெட் பரிசோதகர் அறைக்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போதும் அறைந்தார். இதற்குள் அந்த பெண் தனது நண்பர்களை அழைத்தார்.
அவமானப் படுத்திய பரிசோதகர்:
‘‘கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருந்தும், மற்ற பயணிகள் முன்னிலையில் டிக்கெட் பரிசோதகர் தன்னை கிரிமினல் குற்றவாளி போல அடித்து அவமானப்படுத்தி விட்டார்'' என்று கூறினார்.
மன்னிப்பு கேட்ட அதிகாரி:
இது குறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் இளம் பெண் நிஜாய்ஸ் புகார் மனு கொடுத்தார். மூத்த ரயில்வே போலீஸ் அதிகாரி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். டிக்கெட் பரிசோதகர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து புகாரைத் திரும்ப பெற்றார் நிஜாய்ஸ்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications