For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”இணையத் தமிழுக்கு முன்னோடி” மனிதர் ஸ்ரீநிவாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு - மனைவியும் மரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த பெரு மழையால் சில சிறப்பான மனிதர்களின் மரணச் செய்திகளும் கூட மழையோடு மழையாக அடங்கிப் போனது பெரும் சோகம்தான்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளிவர முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீநிவாஸ். தமிழில் பல்வேறு மென்பொருட்களை அறிமுகம் செய்தவர்.

ஆன்மிக இதழாக வெளிவந்த "தெய்வ முரசு" மாத இதழின் பதிப்பாளராக இருந்த ஸ்ரீநிவாஸ் தமிழ் மொழிக்காக உழைத்தவர். சைவம் நெறிமுறைகள் குறித்த தமிழ் பட்டயப் படிப்பிற்கு முன்னோடியாக இருந்தவர்.

Chennai flood killed a man of Tamil

இணை பிரியா தம்பதிகள்:

ஆனால், இன்று அவர் உயிருடன் இல்லை என்ற செய்தியே அவரைச் சார்ந்தவர்களுக்கு கூட தெரியவராமல் வெள்ளத்திலேயே கரைந்து போய்விட்டது. அடையாறில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் அவரை மட்டுமல்லாமல், அவரது மனைவியான சங்கராந்தியையும் இழுத்து சென்றுவிட்டது.

பெசன்ட் நகரில் தகனம்:

இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

இழுத்துச் சென்ற வெள்ளம்:

ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள வீட்டிலிருந்து தனது தம்பி நலமாக இருக்கின்றாரா எனக் காண வெளியே வந்த ஸ்ரீநிவாஸ் வெள்ளத்தின் வேகம் தாங்காமல் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். கணவரின் நிலையைக் கண்டு துடிதுடித்து தண்ணீரில் இறங்கிய சங்கராந்தியையும் விட்டு வைக்காமல் இழுத்துச் சென்றது வெள்ளம்.

தமிழில் குடமுழுக்கு:

இயக்குனர் தங்கர் பச்சானின் நண்பரான ஸ்ரீநிவாஸ், கிட்டதட்ட 16 இடங்களில் கோயில்களைக் கட்டி, தமிழில் குடமுழுக்கும், தமிழ் வழிபாட்டு முறையும் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்கு வணக்கம் சொன்னவர்:

"தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி, தமிழ் கடிகாரத் துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக் கிய ஸ்ரீநிவாஸ், பன்னிரு திருமுறை களையும் மொபைலில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது'' என்று குமுறியுள்ளார் அவரது தம்பி. சில நேரங்களில் பெரு வெள்ளம் சில பொக்கிஷ மனிதர்களையும் இழுத்துச் சென்றுவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமே!

நன்றி படம்: தமிழ் இந்து

English summary
Srinivas a Tamil language activist and Tamil software maker died in Chennai Flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X