தமிழக வெள்ளம்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அரசு வழியாக நிதி உதவி செய்ய முடியும். இதற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உதவி செய்ய மனமிருந்தும், செய்ய வழி தெரியாமல் இருப்போருக்கு கீழ்கண்ட தகவல் உபயோகமாக இருக்கும்.

நீங்கள் காசோலை அல்லது டிடி எடுத்து அனுப்புனீர்கள் என்றால், 'The joint secretary & treasurer, Chief Minister's Public relief fund, Finance department, Government of Tamilnadu, secretariat, Chennai 600009, Tamilnadu, India. இந்த முகவரிக்கு அனுப்பவும்.
நெட்பேங்கிங் மூலமாக, பணத்தை அனுப்ப வேண்டுமெனில், அதற்ககான தகவல் இதுதான்: Bank-Indian Overseas Bank, Branch: Secretariat Branch, Chennai-600009, S.B.A/c number: 117201000000070, IFS code: IOBA0001172, CMPRF PAN: AAAGC0038F.
நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வருமான வரியில் இருந்து 80ஜி பிரிவின்கீழ் விலக்கு கிடைக்கும்.
நெட்பேங்கிங் மூலமாக (ECS) நிதி செலுத்தியோர், தங்களது பெயர், பண மதிப்பு, வங்கி மற்றும் அதன் கிளை விவரம், பணம் செலுத்திய நாள், பரிவர்த்தனை ரெபரன்ஸ் எண், தங்களது தொடர்பு முகவரி, இ-மெயில் அட்ரஸ் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் பெற்ற பணத்துக்கான ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். வருமான வரி கணக்கின்போது அந்த ரசீதை சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications