Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று காணும் பொங்கல்… சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளதால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மெரினா கடற்கரை, திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் முடிந்த அடுத்த நாளான காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அனைவரும் மெரினா கடற்கரை, அண்ணா உயிரியல் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது வழக்கம். இன்று காணும் பொங்கல் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்தப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவார்கள். கடற்கரை முழுவதும் பொதுமக்களின் கூட்டம் கட்டுங்கடங்காத அளவுக்கு இருக்கும். இதற்காக மெரினாவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு தற்காலிகமாக ஒரு காவல் கட்டுப்பாட்டு அறையும், காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் போலீசார்

15 ஆயிரம் போலீசார்

இதேபோன்று பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கேளிக்கை பூங்காக்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கண்காணிப்பு கோபுரங்கள்

கண்காணிப்பு கோபுரங்கள்

மெரினாவில் உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் மணல் பரப்பில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீதேறி நின்றபடி, 3 போலீசார் கூட்டத்தை கண்காணிப்பார்கள்.

கடலில் குளிக்கத் தடை

கடலில் குளிக்கத் தடை

மேலும், இளைஞர்கள், குழந்தைகள் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கி விளையாடுவார்கள். அப்போது, அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு வேலிகள்

தடுப்பு வேலிகள்

மேலும், பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுப்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும் கூட்டத்தைக் கண்காணிக்க குதிரைப்படை வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மேலும், கடற்கரை மணலில் எளிதாக செல்லக் கூடிய வகையிலான 10 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து போலீசார் சுற்றி வருவார்கள்.

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

இதே போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+