பேனர்களை அகற்றாமல் காவல் துறை என்ன செய்கிறது?: ஹைகோர்ட் சரமாரி கேள்வி
பேனர்களை இன்னும் அகற்றாமல் காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பேனர்களை இன்னும் அகற்றாமல் காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி உள்ளிட்ட பேனர்கள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

நீதிமன்றம் விசாரணை
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடுத்த புகார்களை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இன்னும் ஏன் அகற்றவில்லை?
அப்போது தலைமை நீதிபதி, போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாமல் காவல் துறை என்ன செய்துக் கொண்டிருக்கிறது? பேனர்களை அகற்றாமல் இன்னும் ஏன் அனுமதி தரப்படுகிறது?

சென்னையில்...
கிரின்வேஸ் சாலை முதல் உயர் நீதிமன்றம் வரைதான் பேனர்கள் இல்லை. சென்னையின் மற்ற இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

5-ஆம் தேதி அறிக்கை
விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். பேனர்களை அகற்றாதது தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை, மாநகராட்சி வரும் 5-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications